எம்.சி.சி. கொடுப்பனவுகள் இரத்தாகினாலும் உதவிகள் தொடரும் என்கிறது அமெரிக்கா

இலங்கைக்கான நிதியுதவியை நிறுத்துவது என எம்.சி.சியின் பணிப்பாளர் குழு தீர்மானித்துள்ள போதிலும் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எம்.சி.சி. ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 48 கோடி அமெரிக்க டொலர் கொடுப்பனவை இரத்துச் செய்யஅமெரிக்கா தீர்மானித்துள்ளது. அதன்படி இந்த ஒப்பந்தத்தின் கீழ் பயன் பெறும் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா இலங்கையின் நட்பு நாடாகதொடர்ந்தும் காணப்படும் என தெரிவித்துள்ள தூதரகம், இலங்கை கொரோனாவை எதிர் கொள்வதற்கும் நாட்டை கட்டியயழுப்புவதற்கும் அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளது.