குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா காலமானார்

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த குவைத் மன்னரான அமீர் ஷேக் சபா (91) இன்று (29) காலமானார். இவர் கடந்த 2006 முதல் குவைத் மன்னராக இருந்து வந்துள்ளார்.

கடந்த ஜுலை 18ஆம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் ஜுலை 23ஆம் திகதி அமெரிக்காவிற்கு மேலதிக சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவரின் சிகிச்சை பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் நவாப் அல் அகமது சபா(83) தற்காலிக மன்னராக பொறுப்பேற்றுள்ளார். மன்னர் இறப்பை அடுத்து குவைத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.