இந்தியாவின் நடவடிக்கையை கண்டிக்கிறது எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் பெருமளவான மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளர். இந்த நிலையில் இந்தியா காஸ்மீர் மக்களுக்கான இணையத்தள இணைப்பை மட்டுப்படுத்தியுள்ளது. அதனை கண்டிப்பதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்திய அரசின் நடவடிக்கை ஒரு குற்றமான பொறுப்பற்ற நடவடிக்கையாகும். காஸ்மீரின் சுய அதிகாரம் பறிக்கப்பட்ட நாள் முதல் அங்கு இணையத்தள வசதிகளை தடை செய்து உலகின் தொடர்பில் இருந்து அதனை துண்டித்துள்ளது இந்தியா.