வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் இரண்டு கைக் குண்டுகளுடன் நேற்று (28) ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கடற்படை மற்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியாஆச்சிபுரத்தில் வசிக்கும் சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில்,மன்னாரில் தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர்கள்
முருங்கன் பகுதியில் கைக்குண்டு ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.