இஸ்லாமியருக்கு எதிரான வன்முறை : பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

இந்திய மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடெங்கும் பாரிய போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்திய தலைநகர் டெல்லியில் ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.

வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முஸ்லீம்களுக்கு எதிரான தீவிரவாத இந்துக்களின் தாக்குதல் இடம்பெற்று வருகிறது.

ஏற்கெனவே பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ள நிலையில் மேலும் இறந்தநிலையில் மேலும் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதையடுத்து கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவல்துறையினர் பார்த்திருக்க ,பல சந்தர்பங்களில் துணையுடனும் இந்த வன்முறைகள் நிகழ்த்தப்படுவதாக நேரில் கண்ட செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.