ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சீனா எச்சரிக்கை

 மூன்றாம நாட்டு நிறுவனங்கள் மீது விதிக்கப்படக்கூடிய தடைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சீன வெளிவிவகார அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை(11) தெரிவித்துள்ளதாவது.
ஐரோப்பிய ஒன்றியம் ஒரு விஷயத்தை உண்மையாகப் புரிந்துகொள்ள வேண்டும்: சீனா என்பது பிரஸ்ஸல்ஸின் ஒழுங்கு நடவடிக்கைகளுக்காகக் காத்திருக்கும் ஒரு சிறிய நாடு அல்ல. சீன நிறுவனங்கள், துருக்கிய நிறுவனங்கள், இந்திய நிறுவனங்கள் மற்றும் உங்கள் ரஷ்ய எதிர்ப்பு கொள்கைக்குக் கீழ்ப்படிய மறுக்கும் வேறு எவர் மீதும் நீங்கள் தடை விதிக்க விரும்புகிறீர்களா?
சரி. ஆனால் சீனா பதிலளிக்கும்போது அதிர்ச்சியடைய வேண்டாம். சர்வதேச சட்டம் அல்லது ஐ.நா.வின் அங்கீகாரம் இல்லாமல் விதிக்கப்படும் ஒருதலைப்பட்சத் தடைகள் “விதிகள்” அல்ல. அவை அறநெறி என வேடமிட்ட அதிகார அரசியல். மேலும் ஐரோப்பாவிற்கான  பிரச்சினை எளிமையானது:
சீனா பாதுகாப்பற்றது அல்ல. தடைகளால் இரு தரப்பிலும் பாதிப்பு ஏற்படச் செய்வதற்குத் தேவையான தொழில்துறைத் திறன், சந்தை அளவு, விநியோகச் சங்கிலிகள் மற்றும் எதிர் நடவடிக்கைகள் சீனாவிடம் உள்ளன. ஐரோப்பா இன்னும் உலகப் பொருச்ளாதாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவது போல் தொடர்ந்து செயல்படுகிறது. அது இல்லை. பிரஸ்ஸல்ஸ் தடைகளை ஒரு பழக்கமாக மாற்ற விரும்பினால், சீனாவாலும் எதிர் நடவடிக்கைகளை ஒரு பழக்கமாக மாற்ற முடியும்.
உலகத் தொழிற்சாலையுடன் சண்டைக்குப் போய்விட்டு, அந்தத் தொழிற்சாலை உங்கள் விநியோகச் சங்கிலியைச் சோதிக்கும்போது அழாதீர்கள் என அது மேலும்  தெரிவித்துள்ளது.
ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந் துள்ள சமீபத்திய தடைகள் தொகுப்பில், இந்தியா மற்றும் சீனாவைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களும் அடங்கியிருப்பதை தொடர்ந்து சீனா இந்த கடும் எச் சரிக்கையை வெளியிட்டுள்ளது.