இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தொடர்ந்தும் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமாத்தா தெரிவித்துள்ளார்.
கண்டி – மெவதும்பர பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்ற டித்வா அனர்த்தங்களால் வீடுகளை இழந்த 63 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட இடைக்கால வீடுகளை மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்ட நிகழ்வு, ரங்கலை தோட்டத்தில் நேற்று (17) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜப்பான் தூதுவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இலங்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவது ஜப்பானின் எதிர்பார்ப்பாகும். ஒவ்வொரு குடும்பத்தையும் மீளக்கட்டியெழுப்ப இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை எனத் தெரிவித்தார்.


