ஈரானின் மஹ்சஹர் பெட்ரோ இரசாயன ஆலை மீது தாக்​குதல்: இஸ்ரேல் அறிவிப்பு

லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்துவதால், இஸ்​ரேல் விமான தளங்​களை குறி​வைத்து ஈரான் இராணுவம் ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​யது. இதற்கு பதிலடி​யாக ஈரான் நகரங்​களில் இஸ்​ரேல் போர் விமானங்​கள் குண்டு வீசின. இரு தரப்பு இடையே மீண்​டும் தீவிர போர் ஏற்​படும் சூழல் ஏற்​பட்​ட​தால், ஈரான் மற்​றும் இஸ்​ரேல் தாக்​குதலை நிறுத்த அதிபர் ட்ரம்ப் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

லெப​னான் மீது இஸ்​ரேல் தாக்​குதல் நடத்தி வரு​வ​தால், அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்​பந்​தம் ஏற்​படு​வது பாதிக்​கிறது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்​றம்  சுட்டிக்காட்டியுள்ளார். இதற்​காக இஸ்​ரேல் அதிபர் நெதன்​யாகு​வை​யும், அதிபர் ட்ரம்ப் கண்​டித்​தார். ஆனாலும்,  தாக்​குதலை இஸ்​ரேல் நிறுத்​த​வில்​லை. லெப​னான் தலைநகர் பெய்​ரூட் தென்​பகு​தியை ஆக்​கிரமித்து முன்​னேறி வரும் இஸ்ரேல் இராணுவம், எச்​சரிக்கை விடுக்​காமல் தொடர் தாக்குதலை மேற்​கொண்டு வரு​கிறது.

இஸ்​ரேலின் இந்த நடவடிக்கை மத்​திய கிழக்​கில் முழு அளவி​லான போரை ஏற்​படுத்​தும் என ஈரான் எச்​சரிக்கை விடுத்​திருந்​தது. இந்​நிலை​யில் கடந்த ஏப்​ரல் மாதம் சண்டை நிறுத்​தம் ஏற்​பட்​டதற்​குப்​பின் முதல் முறை​யாக இஸ்​ரேல் மீது ஈரான் நேற்று ஏவு​கணை தாக்​குதலை நடத்​தி​யது.  ஈரான் தாக்குதலுக்கு பதிலடி​யாக இஸ்​ரேல் போர் விமானங்​கள் ஈரானின் மத்​திய மற்​றும் மேற்கு பகு​தி​யில்  தாக்குதல் நடத்தியுள்ளன.

இதனால்   ஈரானின் மஹ்சஹர் பெட்ரோ இரசாயன ஆலை மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக இஸ்​ரேல் இராணுவம் கூறியது. இதனால் இருதரப்​பும் மீண்​டும் கடும் போரில் ஈடு​படும் வாய்ப்​பு​கள் உரு​வாகி​யுள்​ளன.