மாகாண சபைத் தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கருத்து

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் வெளியிடப்படும் கருத்துகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பேற்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்ற விசேட செயற்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே மாகாண சபைத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.