அமெரிக்கா – ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் கருத்து

அமெரிக்கா – ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள நிலையில் இரு நாடுகளின் பேச்சுவார்த்தை குழுவினரும் பாகிஸ்தான் வந்தடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நீடித்த பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதியை அடைவதில் அமெரிக்காவின் உறுதிப்பாட்டை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷக் தார் பாராட்டியுள்ளார்.

ஈரானும் அமெரிக்காவும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என தான் நம்புவதாக அவரை மேற்கோள்காட்டி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் அதில், “இந்த மோதலுக்கு நிலைத்த மற்றும் வலுவான தீர்வை கண்டடைவதை நோக்கி இரு தரப்புக்கும் தொடர்ந்து உதவ பாகிஸ்தானின் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.