இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கான பயண எச்சரிக்கையை வெளியிட்டது ஜேர்மன்!

இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கான பயண ஆலோசனைகளை ஜேர்மன் நாடு புதுப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கனடா, பிரான்ஸ், மொராக்கோ, டென்மார்க் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கே ஜேர்மன் பயண ஆலோசனைகளை புதுப்பிக்கப்பட்டுள்ளது.  குறித்த நாடுகளில் அதிகரித்து வரும் போர் அச்சுறுத்தல்கள், அரசியல் அமைதியின்மை உள்ளிட்ட காரணிகளால் ஜேர்மனி பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள நாடுகளில்  அதிகரித்து வரும் பயங்கரவாத அபாயங்கள், உள்நாட்டு கலவரங்கள் மற்றும் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றுடன் போராடி வருவதால், ஜேர்மனி தனது குடிமக்களை இந்த பகுதிகளுக்குச் செல்வதற்கு முன் எச்சரிக்கையாகவும் தகவலறிந்ததாகவும் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் போராட்டங்கள் முதல்  பயங்கரவாத அச்சுறுத்தல்கள் வரை, புதுப்பிக்கப்பட்ட ஆலோசனை உலகளாவிய பயணத்தின் வளர்ந்து வரும் சிக்கலான தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

அத்துடன், குறித்த நாடுகளுக்குப் பயணிக்கும்  மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு ஜேர்மன் தமது நாட்டு மக்களைக் கோரியுள்ளது.