சஜித் தரப்பினரின் கூட்டு இன்று அங்குரார்ப்பணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி இன்று முற்பகல் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது. இந்த நிலையில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று புதிய அரசியல் கூட்டணியில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மரிக்கார் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை எதிர்நோக்குவதற்காக முன் னெடுக்கப்படும் அடுத்த கட்ட நடவடிக்கையாகவே புதிய கூட்டணி உருவாக்கப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி இன்று கைச்சாத் திடவுள்ளது.

ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் இந்தப் புதிய அரசியல் கூட்ட ணியில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளனர். எதிர்வரும் தேர்தல்களை இலக்கு வைத்து மாத்திரம் நாம் கூட்டணி அமைக்கவில்லை. கொள்கை திட்டங் களின் அடிப்படையிலும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையிலேயே கூட்டணியில் இணைவுள்ளோம்” என்றும் அவா் தெரிவித்தாா்.