28 வருடங்களின் பின் நளினி பிணையில் வெளியில் வந்தார்

இந்தியா முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வந்த நளினி, ஒருமாத கால பிணையில் வெளியில் வந்துள்ளார். இந்தக் காலப்பகுதிக்கான பாதுகாப்பு செலவை இந்திய அரசாங்கமே பொறுப்பேற்றுக் கொள்ளும்.

லண்டனில் வசிக்கும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, தனக்கு 6 மாதகால பிணை வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றில் நளினி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணைக்கு நளினியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளதென காவல்துறையினர்  தெரிவித்ததிருந்தனர். இருந்தும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி குழுவினர் அறிவித்தல் விடுத்திருந்தனர். இதற்கமைவாக இவரின் மனு மீதான விசாரணையின் போது, நளினி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இவர் மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இவரின் பிணை கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து, நளினி ஒரு மாதகால பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊடகங்களை சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனையிலேயே இவர் பிணையில் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வட இந்தியர்களுக்கு ஒரு நீதியும், தென்னிந்திய தமிழ் மக்களுக்கு ஒரு நீதியையும் வழங்கிவரும் இந்திய அரசு தமிழ் இனத்தின் மீது ஒரு மறைமுக இனஅழிப்பு போரை நடத்தி வருவது நாம் அறிந்ததே.