20 கிலோ கொழுந்து பறித்தே ஆக வேண்டும்: தோட்ட நிர்வாகம் கெடுபிடி- தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாளொன்றுக்கு 20 கிலோ பச்சைத்தேயிலை கொழுந்து பறிக்க வேண்டுமென அழுத்தம் கொடுக்கும் நிர்வாகத்திற்கு எதிராக பொகவந்தலாவ பொகவான தோட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

05 1 20 கிலோ கொழுந்து பறித்தே ஆக வேண்டும்: தோட்ட நிர்வாகம் கெடுபிடி- தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொகவந்தலாவ குயினா தோட்ட பிரதான வீதித்தின் பொகவான சந்தியிலே 20-04-2021 காலை இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கும் போது,

01 1 20 கிலோ கொழுந்து பறித்தே ஆக வேண்டும்: தோட்ட நிர்வாகம் கெடுபிடி- தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இதுவரை காலமும் 15 கிலோ பச்சைத் தேயிலை பறித்தோம் ஆனால் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பின் பின்னர் 20 கிலோ கொழுந்து நாளொன்று பரிக்க வேண்டும் என
தோட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுப்பதுடன் அவ்வாறு 20 கிலோ கொழுந்து
பறிக்காவிட்டால் வாரத்தில் 03 நாட்களே வேலை வழங்கப்படும் என அச்சுறுத்தல்
விடுப்பத்தாகவும் இதுவரை வழங்கிக்கிய சுகாதாரம் சம்பந்தமான சலுகைகளும்
குறைக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தனர்.

06 1 20 கிலோ கொழுந்து பறித்தே ஆக வேண்டும்: தோட்ட நிர்வாகம் கெடுபிடி- தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரசாங்கம் ஆயிரம் ரூபாய் நாள் சம்பளம் வழங்கியமைக்கு நன்றி தெரிவிப்பதோடு
அத்தியவசிய விலை உயர்வினாலே ஆயிரம் ரூபாய் சம்பளவுயர்வை கோரினோம் ஆனால் இப்போது பச்சைக்கொழுந்து அதிகளவில் பரிக்க வேண்டுமென தோட்ட நிர்வாகங்கள் அழுத்தம் கொடுக்ககின்றது.

ஆகவே நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், தொழிலமைச்சர் மற்றும் மலையக பிரதிநிதிகள் தோட்ட கம்பனிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

04 20 கிலோ கொழுந்து பறித்தே ஆக வேண்டும்: தோட்ட நிர்வாகம் கெடுபிடி- தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இது தொடர்பில் தோட்ட முகாமையாளரிடன் தொடர்பு கொண்டு கோட்ட போது தற்போது தேயிலை கொழுந்து அதிகளவில் காணப்படுகிறது அகவே தான் கொழுந்து பறிக்ககும் அளவை அதிகரிக்க கோரினேன் தேயிலை செடிகளில் வளர்ந்திருக்கும்
பச்சைக்கொழுந்தினை வீனாக வெட்டி வீச முடியாதெனவும் குறிப்பிட்டார்.

சுமார் 300 தொழிலாளர்கள்  வரை இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஒரு
மணித்தியாலத்தின் பின்னர் கலைந்து சென்றனர்.