இந்திய கடற்பரப்பில் சந்தேகத்தின் பேரில்  5 இலங்கையர்கள் கைது

கொச்சி கடற்பரப்பில், சந்தேகத்தின் பேரில் இலங்கை படகொன்றிலிருந்து ஐந்து  பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று (திங்கட்கிழமை) இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் குறித்த படகிலிருந்து சுமார் 340 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஐந்து இலங்கையர்கள் இந்தியாவில் கைது

குறித்த போதைப்பொருள்,  சிவப்பு நிற ஈரானிய படகில் இருந்து இலங்கை படகுக்கு மாற்றப்பட்டதாக சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும்   கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி, சர்வதேச சந்தையில் 1,750 கோடி இந்திய ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.