1827,ம் ஆண்டு கணிப்பீட்டில் வடக்கு கிழக்கில் எந்த ஒரு சிங்களவர்களும் இல்லை

‘1827, ம் ஆண்டு இலங்கையில் எடுக்கப்பட்ட முதலாவது சனத்தொகை் கணிப்பீட்டில் வடக்கு கிழக்கில் எந்த ஒரு சிங்களவர்களும்  இல்லை’ என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார் .

அண்மையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் வடக்குகிழக்கு தமிழ்பேசும் மக்களின் சொந்தப்பூமி இல்லை அவர்களுக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என கூறிய கருத்துக்கு பதில் கூறுகையில்;

”காவி உடையை போர்த்தி வாயால் பொய் உரைக்கும் இனவாத புத்தபிக்குகளுக்கு வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் பூர்வீகம் தெரியாமல் இருப்பது வேதனை அல்லது தெரிந்தும் அதை மறைப்பது இனவாதம்.

இலங்கை என்பது ஈழம் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது ஆங்கிலேயரின் ஆட்சியில் இருந்து சிலோன் என அழைக்கப்பட்டதுபின்பும் இலங்கை சிலோன்(Ceylon) என்ற பெயரே இருந்தது 1948, ல் விடுதலை பெற்ற பின்னும் இவ்வாறுதான் கூறப்பட்டது.1972,ம் ஆண்டுதான் சிலோன் என்ற பெயர் ஶ்ரீலங்காக பலவலாக கூறப்பட்டுவருகிறது அதை நான் கூறவில்லை.

வடக்கு கிழக்கு்தாயகம் என்பது பல் நெடுங்காலமாக மன்னர் காலம் முதல் பூர்வீக வரலாற்று தமிழ்மக்களுடைய தாயகம் என்பது பல சரித்திர ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

1960,ம் ஆண்டுவரை வடக்கு கிழக்கில் இருந்து எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களும் மருந்துக்கு கூட தெரிவாகவில்லை இது ஞானசாரபிக்குக்கு தெரியாமல் இருப்பது வேதனைதான்.

1827, ம் ஆண்டு இலங்கையில் எடுக்கப்பட்ட முதலாவது சனத்தொகை் கணிப்பீட்டில் எந்த ஒரு சிங்களவர்களும் வடக்கு கிழக்கில் இல்லை.

அந்த காலத்தில் கிழக்குமாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 99.62 வீதமானவர்கள் தமிழ்பேசும் மக்களே. திருகோணமலை் மாவட்டத்தில் 98.44வீதமான தமிழ்பேசும் மக்களே வாழ்ந்தனர் அப்போது அம்பாறை மாவட்டமும் மட்டக்களப்பு மாவட்டத்துடனேயே இணைந்துருந்தது.1961,ம் ஆண்டுதான் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.

1963,புள்ளிவிபரப்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 96,வீதம் தமிழ்பேசும் மக்களும்,
அம்பாறையில் 80, வீதமான தமிழ்பேசும் மக்களும், திருகோணமலையில் 79, வீதமான தமிழ்பேசும் மக்களும் வாழ்ந்தனர்.

பாராளுமன்ற ஜனநாய தேர்தலில் கூட வடக்கு கிழக்கில் இருந்து எந்த ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவான சரித்திரம் இல்லை 1960, ம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற இலங்கையின் நான்காவது பாராளுமன்ற தேர்தலின்போதுதான் முதன் முதலாக அம்பாறை தேர்தல் தொகுதியில் இருந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை்சேர்ந்த விஜயசிங்க விஜயபாகு என்ற சிங்களவர் பாராளுமன்ற உறுப்பினராக்தெரிவாகினார்.

1977,ம் ஆண்டுதான் திருகோணமலை மாவட்டத்தில் சேருவில என்ற தொகுதி உருவாக்கப்பட்டு எச்.டீ லீலாரெட்ண என்ற சிங்களவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

1994,ம் ஆண்டுதான் விகிதாசார்தேர்தல் முறையால் அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக ஆறு ஆசனங்களில் 2, முஷ்லிம்களும் 4, சிங்களவர்களும் தெரிவீனார்கள் ஆனால் 1980, ல் அம்பாறையில் மீண்டும் தமிழர் பிரதிநித்துவம் உறுதி செய்யப்படலடது.

இதுதான் வரலாறு வடக்குகிழக்கில் சிங்களவர்கள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டார்கள் அதனால்தான் சிங்கள பிரதிநித்துவம் வடக்கு கிழக்கில் தற்போது உள்ளது.

வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு அடி்நிலம் இல்லை பல கொடி அடி்நிலம் இருந்தது இலங்கையை்மாறி்மாறி்ஆட்ணெய்த உனவாத்சிங்கள ஆட்சியாளர்களின் சூழ்சியால்தான் திட்டமிட்ட நில அபகரிப்பும் குடியேற்றங்களும் வடக்கு கிழக்கு்மாகாணத்தில் இடம்பெற்றன இதை ஞானதாரதேரர் புரியாமல் இருப்பது கவலை அளிக்குறது.

வடக்கு கிழக்கு தாயகம் தமிழ்பேசும் தாயகம் என்ற கொள்கையில் தான் தந்தை்செல்வா 1949,ம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சியை ஆரம்பித்து ஒரு சமஷ்டி்அடிப்படையிலான்அரசியல் தீர்வுக்காக போராடினார் என்பதை காவி உடை தரித்த ஞானதார்தேரர் புரிந்து கொள்ளவேண்டும்” எனவும் மேலும் கூறினார்.