இலங்கை -வடக்கு கடற்பரப்பில் 16 தமிழக மீனவர்கள் கைது

வடக்கு கடற்பரப்பில் 16 தமிழக மீனவர்கள் கைது

வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நெடுந்தீவு மற்றும் கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்புகளில் நேற்றிரவு(23) குறித்த  மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் 4 தமிழக  மீனவர்கள் நேற்றிரவு(23) கைது செய்து செய்யப்பட்டதுடன் குறித்த மீனவர்களின் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் படகுடன் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக  மீனவர்கள் நால்வரும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(24) முற்படுத்தப்பட உள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பில் 12 தமிழக  மீனவர்கள் இரு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக வடக்கு கடற்பரப்பில் 16 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.