2020 ஆம் ஆண்டு, யேமன் உள்நாட்டுப் போரில் சுமார் 1,500 குழந்தைகள் பலி

யேமன் உள்நாட்டுப் போரில்

யேமன் உள்நாட்டுப் போரில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 1,500 குழந்தைகள் 2020 ஆம் ஆண்டு கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கோடைக்கால முகாம்கள் மற்றும் மசூதிகள் ஆகியவற்றின் மூலம் அரசுக்கு எதிராக போராடும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் குழந்தைகளை போரிடுவதற்காக தங்கள் படைகளில் சேர்த்துக் கொண்டிருப்பதாக, வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள் என்று, பாதுகாப்புக் குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள  அறிக்கை தெரிவிக்கிறது.

கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்தும் வான்வழி தாக்குதல்களால்    பொதுமக்கள் உயிரிழப்புகளை  சந்தித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

2015 ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்கள் மற்றும் யேமன் அரசுக்கு இடையே உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த 300 பக்க அறிக்கையில், 2020 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் ஈடுபடுத்தப்பட்ட 1,406 குழந்தைகளின் பட்டியலையும், அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் 562 குழந்தைகளின் பட்டியலையும் பெற்றதாக, அக்குழு கூறியுள்ளது.

“ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் முழக்கமான ‘அமெரிக்காவுக்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம், யூதர்களை சபிக்கவும், இஸ்லாத்திற்கு வெற்றி’ என்ற முழக்கத்தை முழங்க அக்குழந்தைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,” என, 4 உறுப்பினர்கள் அடங்கிய அக்குழுவின் நிபுணர்கள் கூறியதாக, ஏபி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

Tamil News