150 க்கும் மேற்பட்டோரை காவுகொண்ட நவாலித் தேவாலயத் தாக்குதலின் நினைவு நாள்

இலங்கை விமானப்படையின் விமானக்குண்டுவீச்சில் யாழ் நவாலி சென்பீற்றர் தேவாலயத்தில் கொல்லப்பட்டவர்களின் 24 ஆவது வருட அஞ்சலி நிகழ்வு நேற்று (09) மாலை இடம்பெற்றது.

1995 ஆம் ஆண்டு யூலை 9ல் இடம்பெயர்ந்து மக்கள் தங்கியிருந்த நவாலி சென்பீற்றர் தேவாலயத்தின் மீது விமானப்படையின் விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் 147 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 380 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதன் 24 ஆவது நினைவேந்தலும் அஞ்சலி நிகழ்வும் நவாலி சென்பீற்றர் தேவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது அருட்தந்தை றோய் பேடின் தலைமையில் பிரார்த்தனை இடம்பெற்றது. இதில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Navaly 2019 150 க்கும் மேற்பட்டோரை காவுகொண்ட நவாலித் தேவாலயத் தாக்குதலின் நினைவு நாள்