13ஆவது திருத்த கொணடு வரப்பட்டமைக்கான இலக்குகள் இது வரையில் அடையப்படவில்லை – ஜயநாத் கொலம்பகே

13ஆவது திருத்த சட்டம் கொணடு வரப்பட்டமைக்கான இலக்குகள் இது  வரையில் அடையப்படவில்லை என வெளிவிவகார செயலாளர் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கடந்த கால கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டவுள்ளதோடு 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்படுவதற்கான அதிகாரங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவின் தலையீட்டின் காரணமாகவே 13ஆவது திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் வன்முறையை நிறுத்துவதற்கும் மாகாணங்களை முன்னேற்ற முடியும் என்றே இந்தியா கருதியது. ஆனால் அது இலக்குகளை அடையவில்லை.

அத்தோடு மாகாணங்களுக்கு அனைத்து அதிகாரங்களையும் அரசாங்கத்தால் வழங்க முடியாது. ஆனால் அதிகாரங்கள் மறுசீரமைக்கப்பட்டு மாகாண சபைகள் வினைத்திறனாக செயற்படுவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து.

அதே நேரம் தற்போதைய அரசியலமைப்பானது 20 முறைகள் திருத்தப்பட்டு விட்டது. ஆகவே புதிய அரசியலமைப்பொன்று அவசியமற்றது. அந்த அரசியலமைப்பானது கடந்த காலத்தில் கற்றுக்கொண்ட பாடங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய வேண்டும்” என்றார்.