மாலியில் தாக்குதல், 54 படையினர் பலி

மாலியின் வடகிழக்குப் பகுதியில் இராணுவ முகாம்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  54 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மாலியில் மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதல்களில் ஒன்றாக பதிவாகியுள்ள இந்தி சம்பவமானது மேனகா பிராந்தியத்தில், இன்தெலிமான் என்ற இடத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இராணுவ முகாம்களுக்கு புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டும், தற்கொலை குண்டுகளை வெடிக்கச் செய்தும் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந் நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.