ரெலோவில் இருந்து விலகினார் சிவாஜி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தவிசாளராக பதவி வகித்து வந்த சிவாஜிலிங்கம் தானாகவே கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந் நிலையில் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி  அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதனையடுத்து தானாகவே கட்சியில் இருந்து விலகுவதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.

இதற்கமைய கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகுவதாக கட்சியின் செயலாளர் நாயகமான சட்டத்தரணி என். சிறிகாந்தாவிடம் இன்று காலை நேரடியாக கடிதமொன்றையும் கையளித்துள்ளார்.