இந்தியாவில் இருந்து கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் உட்பட 10 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இலங்கையர், சென்னையில் வசிப்பவர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், ஏனைய 9 பேர் முன்னுக்குப் பின் முரணாகக் கூறியுள்ளதால், அவர்களின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை.
அதற்கமைய, அவர்களை காவல்துறையினரிடம் அழைத்துச் சென்று தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.