வெலிக்கடை தொற்றாளர் தொகை 102 ஆக அதிகரிப்பு – நேற்றும் 72 பேருக்கு கொரோனா பரவல்

வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் 72 பேர் கொரோனாவைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனாத் தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 63 பெண் கைதிகளும், 8 ஆண் கைதிகளும் ஒரு சமையல்காரரும் அடங்குகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறையில் ஏற்கனவே 29 கைதிகளுக்கும், சிறை அதிகாரி ஒருவருக்கும் என 30 பேருக்குக் கொரோனாத் தொற்று அடையாளம் காணப்பட்டிருந்தது. அதற்கமைய தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, நேற்றுமுன்தினம் போகம்பறை சிறைச்சாலையில் 7 கைதிகளுக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.