வீடியோ கொன்பரன்ஸ் மூலம் கடமையைப் பொறுப்பேற்ற இந்தியத் தூதுவர்

சிறீலங்காவுக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது நியமனக் கடிதத்தை சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று காலை வீடியோ கொன்பரன்ஸ் மூலம் காண்பித்து தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

மருந்துப்பொருட்கள் வந்த விமானத்தில் இந்தியாவில் இருந்து வந்த அவர் சுய தனிமைப்படுத்தலில் இருப்பதால், ஜனாதிபதியிடம் நியமனக் கடிதத்தை கையளிக்கும் நிகழ்வு நேரடியாக நடைபெறவில்லை.

கடமைகளை பொறுப்பேற்ற இந்தியத் தூதுவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடனும் தொலைபேசியில் உரையாடினார்.