விவசாயிகளின் தொடர் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

கடந்த ஆண்டு நவம்பர் 26ம் திகதி முதல் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களை இரத்து செய்யுமாறு கோரி,  டெல்லியின் எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில், இதுவரை 53 பேர் இறந்துள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் 20 பேர் பஞ்சாபிலும் 33 பேர் டெல்லி எல்லையிலும் உயிரிழந்தனர்.

அரசு அமுல் செய்துள்ள விவசாய சட்டங்களை இரத்து செய்யுமாறு விவசாயிகள் கோருகின்றனர். ஆனால் இவை சீர்திருத்தங்கள் என்று அரசு சொல்லுகின்றது.

விவசாயிகள் உயிரிழக்க சாலை விபத்து முதல் குளிர் வரை பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதே நேரத்தில், சிலர் தமது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.