விடுதலைப்புலிகளுடனான போரில் 15,000 இந்தியப் படையினரை இழந்தோம்-இந்திய முன்னாள் வெளிவிவகார அமைச்சர்

விடுதலைப்புலிகளுடனான போரில் இந்தியா 15,000 படைவீரர்களை இழந்ததாக இந்திய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வார் சிங் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வழமையாக 1500 பேரே கொல்லப்பட்டததாக இந்திய தரப்பு கூறிவரும் நிலையில் இந்த செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய அமைச்சரவையின் ஒப்புதல் இன்றியே அப்போதைய பிரதமர்
ராஜீவ் காந்தி இலங்கைக்கு இந்தியப்படைகளை அனுப்பியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அவரின் இந்த நடவடிக்கை பின்னாளில் அவருக்கு எமனாக வந்ததென்றும் அவர் கூறினார்.