கடற்படையினரில் 693 பேருக்கு கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் கடற் படையினர் மற்றும் அவர்களுடன் நெருக்கமான 729 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 693 கடற்படையினர் உள்ளடங்குகின்றனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட கடற்படையினரில் 344 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், 349 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.