சிறீலங்காவின் பொருளாதாரத்தை இந்தியா காப்பாற்றும் – மோடி

கொரோனா வைரஸ் காரணமாக வீழ்ச்சி கண்டுள்ள சிறீலங்காவின் பொருளாதார முன்னனேற்றத்திற்கு இந்தியா முழு உதவிகளையும் வழங்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா பிரதமர் மகிந்தா ராஜபக்சாவின் 50 வருட அரசியல் வாழ்க்கையின் பூர்த்தியை முன்னிட்டு மகிந்தாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

சிறீலங்காவின் அபிவிருத்தியில் மகிந்தாவின் பங்களிப்பை பாராட்டிய மோடி, அறுமுகன் தொண்டமானின் இழப்பு குறித்தும் துக்கம் தெரிவித்திருந்தார். இந்தியாவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையில் நல்லுறவுகளை பலப்படுத்துவதில் ஆறுமுகன் மிகப்பெரும் பணியாற்றியதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.