வானத்தில் எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை பெருவெற்றி

வானத்தில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் அஸ்ரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விண்வெளி மற்றும் இராணுவ பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் வெளி நாடுகளிடமிருந்து தளபாடங்கள் வாங்கும் அதேசமயம் உள்நாட்டில் தளபாட உற்பத்தி செய்வது குறித்தும் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகின்றது.

அண்மையில் தரையிலிருந்து புறப்பட்டு விண்வெளியில் செல்லும் சற்றலைட்களை தாக்கும் புதியரக ஏவுகணையை சோதித்து அதில் வெற்றியும் பெற்றது. இந்நிலையில் வானத்தில் உள்ள இலக்குகளை வானத்திலிருந்தே அழிக்கும் ஏவுகணையை உருவாக்கும் புதிய முயற்சியை இந்தியா மேற்கொண்டிருந்தது. இந்த ஏவுகணைக்கு அஸ்திரா என்று பெயரிட்டிருந்தார்கள்.