வவுனியா நகரின் பல பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில் வவுனியா நகரின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

நீதியினை நிலைநாட்டு என்ற தலைப்புடனான சுவரொட்டிகளே இன்று அதிகாலை ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

IMG 20210421 135211 வவுனியா நகரின் பல பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 2 வருடங்கள் – சூத்திரதாரிகள் சுதந்திரமாக! நீதியை நிலைநாட்டு” என்ற வாசகம் குறித்த சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகள் வவுனியா நகர், குருமன்காடு, நூலக வீதி, நகரசபை வீதி, வைரவப்புளியங்குளம், குருமன்காடு ஆகிய பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

IMG 20210420 WA0009 வவுனியா நகரின் பல பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.