வலுவடைந்து வரும் ரஷ்ய – அமெரிக்க பனிப்போர்

ரஷ்யாவிடமிருந்து S 400 ஏவுகணை தடுப்பு அமைப்புக்களை வாங்கக்கூடாது என அமெரிக்கா துருக்கி உள்ளிட்ட நாடுகளை எச்சரித்திருந்தது. அத்துடன் F – 35 அதி நவீன போர் விமானங்களை துருக்கிக்கு வழங்க மறுத்தும் வந்தது. இந்நிலையில் துருக்கிக்கு சுகோய் SU – 35 போர் விமானங்களை வழங்கத் தயார் என ரஷ்யா அறிவித்துள்ளது. மேலும் துருக்கி ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை தடுப்பு அமைப்பையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஈரான் – அமெரிக்காவிடையே பனிப்போர் நிகழ்ந்து வரும் நிலையில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு சர்வதேச ரீதியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.