வடமராட்சியில் சிறீலங்கா காவல்துறையினர் தாக்குதல்

யாழ் மாவட்டம் வடமராட்சியில் உள்ள குடத்தனை-மாளிகைதிடல் அம்மன் ஆலயப் பகுதியில் வீடு ஒன்றிற்குள் நேற்று அத்துமீறி நுளைந்த சிறீலங்கா காவல்துறையினர் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அயலில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சிறீலங்கா காவல்துறையினரின் இந்த தாக்குதலில் காயமடைந்த 3 பேர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பெண் ஒருவர் சிறீலங்கா காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் உள்ள வீட்டில் உள்ளவர்கள் மணல் ஏற்றயதாக கூறியே காவல்துறையினர் சட்டத்திற்கு முரனாக மக்களை தாக்கியுள்ளனர். ஆனால் தாம் மண் ஏற்றவில்லை என அவர்கள் மறுத்துள்ளனர்.