வடபகுதி மக்கள் சிந்திக்க வேண்டுமாம் – ரணில் கூறுகிறார்

வடக்கில் உள்ள மக்களை முன்பு ஆட்சி புரிந்த அரசு புறக்கணித்திருந்தது எனவே தமிழ் மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும் என சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் நேற்று (14) கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போரின் பின்னர் ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருந்த முன்னைய அரசு தமிழ் மக்களை புறக்கணித்திருந்தது. வடபகுதி மக்கள் தமது இறைமையை காப்பாற்ற வேண்டும். வவுனியாவின் அபிவிருத்திக்கு மட்டும் 20.5 பில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளர்.

இதனிடையே, ரணில் அரசும், முன்பு ஆட்சியில் இருந்த மகிந்தா அரசும் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து அநீதிகளையே இழைத்து வந்திருந்தன. இராணுவ ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப்பு, பௌத்த ஆலயங்களை அத்துமீறி அமைத்தல் போன்றவற்றை இரண்டு அரசுகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருவது தமிழ் மக்கள் அறிந்ததே.