வடக்கில் மத பிரிவினையை தோற்றுவிக்க இந்தியா முயற்சி?

சிறீலங்காவில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இந்துக்களின் வாக்குகள் இந்துக்களுக்கே அளிக்கப்பட வேண்டும் என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அனுசரனையுடன் இயங்கிவரும் சிவசேன என்ற இந்துத்துவக் கட்சியே இந்த சுவரெட்டிகளை யாழில் ஒட்டியுள்ளது. யாழ்ப்பாணம், கொடிகாமம், சாவக்கச்சேரி மற்றும் கைதடி ஆகிய பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதனிடையே, இது ஒரு இனப்பிரிவினையை தோற்றுவிக்கும் நடவடிக்கை என இந்த சுவரொட்டி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சுயாதீனமானதும், நியாயமானதுமான தேர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.

வடபகுதியில் உள்ள மக்கள் தொகையில் 43 விகிதமானவர்கள் கத்தோலிக்க மதத்தை சேர்ந்த தமிழ் மக்கள் என தெரிவிக்கப்படுகின்றது.