வடக்கில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 557 பேர் கொரோனாவால் பாதிப்பு

வடமாகாணத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும்  557 பேர் கொரோனா நோய் தொற்றுடையவர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் 330 பேர் வவுனியா மாவட்டத்திலிருந்தும், 159 பேர் மன்னார் மாவட்டத்திலிருந்தும், 46 பேர் யாழ் மாவட்டத்திலிருந்தும் 14 பேர் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தும், 8 பேர் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலத்திலிருந்து வடமாகாணத்தில் இதுவரை 805 நோயாளர்கள் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 362 பேரும் யாழ் மாவட்டத்தில் 221 பேரும் மன்னார் மாவட்டத்தில் 176, பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 34 பேரும் முல்லலைத்தீவு மாவட்டத்தில் 12 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று ஆரம்பமான காலம் முதல் இன்று வரை வடமாகாணத்திலே கொரோனா தொற்றினால் மூன்று இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் இரு இறப்புக்களும் வவுனியா மாவட்டத்தில் ஒரு இறப்பும் நிகழ்ந்துள்ளது.

2021 ஜனவரி மாதம் யாழ் போதனா வைத்தியசாலையில் 11,329 PCR பரிசோதனைகளும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 4,626 PCR பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.