வடகொரிய அதிபர் கிம் கோமா நிலையில்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமா நிலைக்கு சென்றிருப்பதாகவும், அதனாலேயே அவரின் அதிகாரப் பொறுப்புகள் அனைத்தும் அவரின் சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கிம் டே ஜங்கின் உதவியாளரான சாங் சங் மின் தகவல் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து சாங் சங் மின் தனது ருவிற்றர் பக்கத்தில், “வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அவர் வாழ்வு இன்னும் முடிவு பெறவில்லை. தற்போதைய நிலவரப்படி வடகொரியாவின் அனைத்து அரசுப் பொறுப்புகளும் (தேசியம் மற்றும் சர்வதேசம் உட்பட) அவரது சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிம்மிற்கு அண்மையில் நடைபெற்ற இருதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சி.என்.என். செய்தி வெளியிட்டது. இதனையடுத்து அவரின் உடல்நிலை பற்றிய பல்வேறு வதந்திகள் பரவியிருந்தன. இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கிம் பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.

ஆனால் சமீபத்தில் கிம் தொடர்பாக வடகொரிய அரசு வெளியிட்ட அனைத்துப் புகைப்படங்களும், வீடியோக்களும் போலியானவை என்று தென்கொரிய புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிபரின்  சகோதரியான கிம் யோ ஜாங் அடுத்த சக்தி வாய்ந்த நபராகக் கருதப்படவதால் அந்நாட்டின் அதிகாரம் படைத்த அமைப்பான வடகொரிய தொழிலாளர் கட்சியின் மத்தியகுழு உறுப்பினராகவும், அரசியல் தலைவராகவும் உள்ளார். இவருக்கு அதிபர் கிம் அரசியலில் முக்கிய பொறுப்புகளை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.