சீனாவின் புதிய செயற்கைக் கோள் விண் நோக்கி சென்றது

சீனாவின் புதிய ‘ஒப்டிக்கல் ரிமோட் சென்சிங்’ என்ற செயற்கைக் கோள் நேற்று (23) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஜியுவான் செயற்கைக் கோள் ஏவுதளத்திலிருந்து உள்ளுர் நேரப்படி காலை 10.27இற்கு சீனாவின் செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

‘காபென் 9 05’ என்ற அந்த செயற்கைக்கோள் ‘மார்ச்2 டி செரியர்’  றொக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அது வெற்றிகரமாக புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த செயற்கைக் கோள் அளவீடுகள், நகர திட்டமிடல், சாலைகள் வடிவமைப்பு, பயிர் விளைச்சல் மதிப்பீடு, பேரழிவு தடுப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகளுக்கு இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.