யாழ் பல்கலைக்கழக பகிடிவதை: மேலும் 8 மாணவர்களுக்குத் தடை

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் மேலும் எட்டு மாணவர்களுக்கு நேற்று முதல் பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு மாணவர்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 8 மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.