பிக்கு உடையில் கொழும்பு செல்ல முயன்ற இருவர் சென்னை விமான நிலையத்தில் கைது

இலங்கைக்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற புத்த மத துறவிகள் உடையில் இருந்த 2 பேர் சென்னை விமான நிலையத்தில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் வங்க தேசத்திலிருந்து சட்ட விராதமாக ஊடுருவி வடமாநிலங்களில் தங்கியுள்ளனர்.

பின்னர் போலி பாஸ்போர்ட் பெற்று அவர்கள் கொழும்பு விமானம் மூலம் இலங்கை செல்ல முயன்றனர். அவர்களை குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இருவருக்கும் தீவிரவாத கும்பலுடன் தொடர்பு உள்ளதாக என விசாரணை நடைபெற்று வருகிறது.