யாழ்ப்பாணத்தில் இந்தியத்தூதுவர் சந்தோஷ் ஜாவின் சந்தோசம்.! : பா.அரியநேத்திரன்

இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா இம்மாதம் முதல்வாரம் 2026, யூன்,02, ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு பல்துறைசார் விஜயமொன்றை மேற்கொண்டார். நிலை யானதொரு எதிர்காலத்துக்கு வலுவூட்டும் நோக்கில் அவருடைய பயணமும் பார்வையும், அபிவிருத்திக்கான திட்டங்களும் அமைந்திருந்ததை காணலாம்.
ஏற்கனவே சில தடவைகள் குறிப்பாக இலங் கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கடந்த 2024 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார். குறிப்பாக இந்திய உயர்ஸ்தானிகராக பதவியேற்ற பின்னர், 2024 பெப்ரவரி 15 ,16, 17,யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்திற்கான தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
2025 ஜனவரி 17,ல்,யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, வடக்கு மாகாண அரசியல் பிரமுகர்கள் மற்றும் மீனவர் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடி யிருந்தார். தற்போது இந்த மாதம் முதல்வாரம் 2026, யூன், 02, ம் திகதி யாழ் சென்ற இந்திய தூதுவர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, காங்கேசன்துறைமுகம் ஆகிய இடங்களைப் பார்வையிட்டதுடன், கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திலும்
வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இந்திய தூதுவரின் யாழ். விஜயத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:
காங்கேசன்துறைமுகத்தில் இயக்கப்படும் பயணி கள் கப்பல் சிவகங்கை சேவைகள் கப்பல் போக்கு வரத்து குறித்து அதிகாரிகளுடனும் பயணிகளுடன் கலந்துரை யாடியதுடன் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்குச் சென்று அங்கு இடம்பெற்றுவரும் உற்பத்தி மற்றும் தொழில் சார் செயற்பாடுகளின் தற்போதைய நிலை மைகளைக் கேட்டறிந்துகொண்டார்.
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று விசேட வழிபாடுகளிலும் ஈடுபட்டதை அறியமுடிந்தது. யாழ்ப் பாணத்தின் அனலைதீவு, நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய மூன்று தீவுகளில் இந்தியாவின் 11 மில்லியன் டொலர் மானிய உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தித் திட்டத்தின் முன்னேற்றப் பணிகளை அவர் நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெடுந்தீவில் அமைந்துள்ள புதுப்பிக்கத்தக்க வலு சக்தித் திட்ட தளத்திற்கு நேரடியாக விஜயம் மேற் கொண்டு, அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் தனது உத்தியோகபூர்வ சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
யாழ்ப்பாணத்துக்கு அப்பாலுள்ள நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளிலும் இத்திட்டம் தற்போது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டமானது சூரிய சக்தி, காற்றாலை மற்றும் மின்கலச் சேமிப்பு ஆகியவற்றுடன், அவசரத் தேவைக்கான டீசல் மின்பிறப்பாக்கி வசதிகளையும் உள்ளடக்கியதாக, 4.3 மெகாவோல்ட் மின் உற்பத்தித் திறனைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்ட செயல்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், முழுமை யான செயல்பாடுகள் அனைத்தும் இவ்வாண்டின் இறுதிக் குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசாங்கத்தின் 11 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்த மனிதாபிமானப் பங்களிப்பானது, பிரதான மின்விநியோகக் கட்டமைப்புடன் இணையாத இத்தீவுப் பகுதி மக்களுக்கு நம்பகமான மற்றும் தூய்மையான பசுமை ஆற்றலை வழங்குவதை உறுதி செய்யும்.
சூரிய சக்தி, காற்றாலை, டீசல் மற்றும் பேட்டரி சேமிப்பு ஆகியவற்றின் மூலம் 4.3 மெகாவோல்ட்  மின் சாரத்தை உற்பத்தி செய்தல்.  தேசிய மின் இணைப்புடன் தொடர்பில்லாத இத்தீவுப் பகுதிகளுக்குத் தூய்மையான பசுமை ஆற்றலை வழங்குதல். இத்திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளும், முழுமையான செயல்பாடுகள் 2026 இறுதிக்குள்ளும் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் 05 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையை, நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பதற் காக இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த ரயில் பாதை சீரமைப்புப் பணி முன்னெடுக்கப்பட்டதாக சந்தோஷ் ஜா குறிப்பிட்டுள்ளார்.
இந்திய உயர்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட இந்திய உயர்தானிகராலய உத்தியோகத்தர்கள் குழு நேற்று யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு விஜயம் -இதன்போது அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தி இந்திய உயர்ஸ்தானிகர் நூல்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.
அமெரிக்க டொலர் 5 மில்லியன் இந்திய நிதியுதவி யின் கீழ் புனரமைக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையின் தற்போதைய நிலவரங்களை நேரில் ஆராய்வதற்காக, இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா கண் காணிப்பு விஜயம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.
‘தித்வா’ சூறாவளிப் பாதிப்புக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பாரிய மறுசீரமைப்புப் பொதியின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய பிரதேசங்களை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக் கும் இந்த பிரதான போக்குவரத்துப் பாதை, கடந்த ஆண்டு ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளி காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததுடன், இப்பாதையிலுள்ள ஐந்து பாலங் களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது.
இத்திட்டத்தின் மூலம் இலங்கையுடனான உறவு களை மீண்டும் கட்டியெழுப்புவதுடன், மீள்வளவாக்கல் பணிகளை விரைவுபடுத்துவதே நோக்கம் என இந்திய தூதுவர் தனது உத்தியோகபூர்வபக்கத்தில் பதிவிட்டுள்ளதை காணமுடிந்தது.
2026 யூன் 02, ல்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான இந்திய நிதியுதவி வழங்கும் நிகழ்வி லும் பங்குபற்றி பல்கலைக்கழக மாணவர்களின் நலனிலும் அக்கறை காட்டியும் இருந்தார் கடந்த காலங்களில் போரினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும் வடகிழக்கு பகுதிகள் பாதிக்கபட்டன. போர் முடிவுற்று 17, ஆண்டுகள் நிறைவடைந்தும் தமிழர்களுடைய நிலங்களில் முழுமை யான அபிவிருத்திகளை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்யவில்லை இவ்வாறான நிலையில் இந்திய அரசினால் சில திட்டங்கள் இலங்கை ஆட்சியாளர்களின் அனுமதி யூடாகவே மேற்கொள்ளப்பட்டுவருவதை பார்க்கலாம். யாழ்ப்பாணத்துக்கு இதுவரை தற்போதைய இந்திய தூதர் சந்தோஷ் ஜா மூன்றுதடவை சென்று பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பது ஓரளவேனும் அப்பகுதி மக்களுக்கு வரப் பிரசாதமாக உள்ளது.
அதேபோல் தற்போதைய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மட்டக்களப்புக்கு ஒரு முறை உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ளார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், 2024 ஆம் ஆண்டு மே 01 முதல் மே 04 வரை அவர் மேற்கொண்ட கிழக்கு மாகாண சுற்றுப்பயணத்தின் போது மட்டக்களப்புக்கு வருகை தந்தார்.
இந்த விஜயத்தின் போது அவர் மேற்கொண்ட முக்கிய நிகழ்வுகளாக இந்தியா வழங்கிய நிதியுதவியுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப் பட்டு வந்த புதிய சத்திரசிகிச்சைப் பிரிவின் முன்னேற்றத்தை பார்வையிட்டார். அதனை விட இந்திய அரசாங்கத்தால் வீடற்ற குடும்பங்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பூர்த்தி செய்யப்படாமல் உள்ள மாதிரி கிராம வீட்டுத் திட்டங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அபிவிருத்திக்காக இந்திய அரசு ஈழத்தமிழர்களுக் காக பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை மேற்கொண்டா லும் மாகாணசபை தேர்தல் தொடர்பாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதில் நெகிழ்வுத்தன்மையை கடைப் பிடிப்பதையே காணமுடிகிறது.