யாழ்ப்பாணத்திற்கு தென்னிலங்கையிலிருந்து பணியாளர்

யாழ்ப்பாணத்திலுள்ள மின்சார சபையின் பிராந்திய அலுவலகத்திற்கு சிறிலங்காவிலிருந்து 9 சிங்கள இளைஞர்கள் இரகசியமான முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முகாமைத்துவ உதவியாளர்கள் மூவரும், சாரதிகள் ஆறுபேரும் இவ்வாறு நியமனம் பெற்றுள்ளனர்.

மகிந்த பிரதமராக இருந்த போது 61 இளைஞர்கள் மின்சார சபைக்கு நியமனமாகி வடக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இதற்கு தமிழ்க் கூட்டமைப்பினர் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து, இந் நியமனங்கள் நிறுத்தப்பட்டன. இதன் பின்னர் ரணில் ஆட்சியில் வடக்கிற்கு சிங்களவர்கள் நியமனம் செய்வது நிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் இப்போது இந்நியமனங்கள் வழங்கப்பட்டு, இவர்கள் இங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வடக்கில் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி திண்டாடும் நிலை இருக்கும் போது, இவ்வாறு சிறிலங்காவிலிருந்து இளைஞர்கள் வடக்கிற்கு அனுப்பப்படுவதது  மக்களை விசனத்திற்குள்ளாக்கியுள்ளது.