யாழில் வாள்வெட்டுக் குழுக்கள் அட்டகாசம்; மோட்டார் சைக்கிள்களில் வந்தோர் மடக்கிப்பிடிப்பு

யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டுப் பகுதியில் வாள்வெட்டு மோதலுக்குச் சென்றவர்களை இராணுவம் மடக்கிப் பிடித்துள்ள பரபரப்பான சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது.

இந்தப் பகுதியால் 7 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை இராணுவம் வழி மறித்துள்ளது. இதன்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மட்டுமே சிக்கியுள்ளனர். ஏனையவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்

கைது செய்யப்பட்ட இருவரும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட வாளுடன்விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.