ஞானசார தேரரின் உயிருக்கு அச்சுறுத்தலாம்: பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பாதுகாப்பு வழங்குமாறு, உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாக்கும் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக ஞானசார தேரர் வழங்கிய சாட்சியம் காரணமாக அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனத் தெரிவித்து ஆணைக்குழுவின் தலைவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசருமான ஜனக்க டி சில்வா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக் குழுவில் ஞானசார தேரர் மூன்றாவது முறையாகவும் சாட்சியமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.