ஐ.தே.காவின் தேர்தல் நாடகம் – ரணிலை குற்றஞ்சாட்டும் சுமந்திரன்

யாழ். மாநகரசபை மண்டபத்திற்கான நிரந்தரக் கட்டடத்திற்கான அடிக்கல்லை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (07.09) நாட்டி வைத்தார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தந்துள்ள பிரதமர் யாழ். மாநகரசபை முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த அடிக்கல்லை  நாட்டி வைத்தார்.

2ஆயிரத்து 350 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள மாநகரசபை மண்டபத்திற்கு 2019ஆம் ஆண்டில் 750 மில்லியன் ரூபா அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், யாழ். மாநகரசபை உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலர். நா.வேதநாயகன், யாழ் மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலன், நகர அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பேசுகையில்,

தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை அமைச்சராக இருந்த காலத்தில் ஏனைய இரு அமைச்சர்களின் வழிகாட்டலில் (காமினி திஸநாயக்க, உட்பட சிங்கள அமைச்சர்கள்) யாழ்ப்பாண பொது நூலகம் ஒரே இரவில் எரித்து அழிக்கப்பட்டது. (01.06.1981இல் எரிக்கப்பட்டது) ரணில் விக்கிரமசிங்க முன்னிலையிலேயே சுமந்திரன் பேசினார்.

இந்றைய தினம் யாழ். நகருக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் மிகுந்த நாளாகும். இந்தக் கட்டடம் எப்படி அழிந்தது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். இந்த மாநகரசபை மண்டபம் கோட்டையிலிருந்த இராணுவத்தினரின் தொடர்ச்சியான எறிகணை வீச்சினாலேயே அழிக்கப்பட்டது.  இதே கட்டடத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் நேரடியாக வந்து அடிக்கல் நாட்டி வைத்ததென்பது யாழ். மக்களுக்கான ஒரு முக்கிய செய்தியாகும்.

யாழ்ப்பாணம் தமிழ் மக்களின் கலாசாரத்திலே எவ்வளவு முக்கியத்துவமானது என்பதை பிரதமர் நன்கு அறிவார். எனவே இந்தப் பகுதிகளின் அபிவிருத்திப் பணிகளுக்கு அவர் விசேட முக்கியத்துவம் செலுத்தியதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.

ranil sumi4 ஐ.தே.காவின் தேர்தல் நாடகம் - ரணிலை குற்றஞ்சாட்டும் சுமந்திரன்நாங்கள் இந்த முயற்சிகளுக்கு எங்களது முழுமையான ஆதரவை கொடுப்போம். நான்கரை ஆண்டுகளில் என்ன நடந்தது என்று கேட்போருக்கு இந்தக் கட்டடங்கள் சான்றாக அமையும். இந்த மாற்றங்கள் எப்படியான உண்மையான மாற்றங்களாக பிரதிபலிக்கின்றன என்ற பாடம் எங்களின் மக்களின் மனங்களிலேயே ஆழமாக பதிகின்றது.  என்று கூறி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றி கூறினார்.

மேலும் யாழ். நகரில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற பேருந்து நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பார்வையிட்டுள்ளார். யாழ். மாநகரசபையால் யாழ். நகர மத்தியில் அமைக்கப்படவுள்ள பேருந்து நிலையத்தைச் சென்று பார்வையிட்டுள்ளார்.