யாழில் கோண்டாவில் சந்தியில் ‘ஆவா’ குழு அட்டகாசம்.

யாழ்ப்பாணம் – கோண்டாவில் சந்தியில் தரித்து விடப்பட்டிருந்த வாகனம் ஒன்றை ஆவா குழுவினர் அடித்து நொறுக்கியுள்ளனர்.

கோண்டாவில் சந்தியில் உள்ள பூட் சிற்றி ஒன்றில் நேற்று (05) இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனம் பூட் சிற்றியில் வேலை பார்க்கும் முகாமையாளரின் வாகனம் என தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் இத்தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என வாகன உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த முறைப்பாட்டின் பிரகாரம், கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்