யார் அந்த அரசியல்வாதிகள்; தேர்தல் ஆணையாளர் பகிரங்கப்படுத்த வேண்டும்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு இந்த அரசாங்கம் வழங்கிய நியமனங்களை தடுத்த அரசியல்வாதிகள் தொடர்பில் பகிரங்கமாக தேர்தல் ஆணையாளர் வெளிப்படுத்தவேண்டும் என வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தம்மீதான இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடுசெய்திருந்தது.இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் கே.அனிதன்,

தேர்தல் ஆணையாளரினால் பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிpத்தல்கள் ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையில் உள்ளது.தேர்தலின்போது வேலையற்ற பட்டதாரிகளின் நியமனத்திற்கு எந்த சிக்கலும் இல்லையென தேர்தல் ஆணையாளர் கூறியிருந்தார் தற்போது கூறுகிறார் 28 கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது தேர்தலை மையப்படுத்தி நியமனக்கடிதங்கள் வழங்கப்படுகிறது அதனால் இதனை நிவர்த்தி செய்யுமாறு கூறியிருந்தார். நாம் கேட்கின்றோம் யாரும் அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் தேர்தல் சட்டங்கள் மாறுபடுமா? கிடைக்கப்பெற்ற 28 கடிதங்களும் எந்தக்கட்சியில் இருந்து யார் அனுப்பினார் என்பதை அகில இலங்கையில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் தேர்தல் ஆணையாளர் தெரிவிக்கவேண்டும்.

இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் அரசியல் நலனுக்காக இவ்வாறான கல்வித் தூண்களை உடைத்து குழிதோன்டிப்புதைக்கும் அளவிற்கு இவர்களின் செயற்பாடு உள்ளது. எமது கல்விக்கு இடையூறு ஏற்படுத்திய அரசியல்வாதிகளை தேர்தல் ஆணையாளர் எங்களுக்கு ஊடகங்கள் வாயிலாக வெளிபப்டையாக கூற வேண்டும். ஜனாதிபதி கோத்தபாஜ ராஜபக்ஸ அவர்களும் எமது பிரச்சினையை கவணத்திரல் கொள்ளவேண்டும்.

நினைத்து நினைத்தவாறு செயற்பட்டு பட்டதாரிகளின் மனநிலையைக் குழப்பவேண்டாம் வேலையில்லாம் பல போராட்டங்கள் ஆர்ப்ட்டங்கள் செய்து மனநிலையால் பாதிக்ப்பட்ட எங்களை மீண்டும் நியமனம் வழங்கப்போகிறோம் கடிதம் அனுப்புகிறோம் என்றும் கூறி கடிதம் கிடைத்ததும் நாம் அதை ஏற்றுக்கொள்ளும் வேளையில் அவை இரத்து செய்யப்பட்டுளது என கூறும்விடம் எம் மத்தியில் பெறும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தயவு செய்து இவ்விடயத்திற்கு பொறுப்பானவர்கள் இவ்விடயம் தொடர்பில் கவணம் செலுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சஜித் பிரேமதாச குறிப்பிட்டிருந்தார் பட்டதாரிகளின் நியமனத்தை இரத்து செய்தமையை கண்டிப்பதாக. முன்னைய அரசாங்கமான ஐக்கிய தேசிய கட்சி பட்டதாரிகளை வயது, தகமை என ஓரம்கட்டியது அப்காலகட்டத்தில் வழங்கப்பட்ட நியமனங்கள் இறந்த உடலுக்கு உயிர்கொடுப்பது போன்றிருந்தது.ஆனால் தற்போதை அரசாங்கம் பாகுபாடின்றி நியமனம் வழங்குகின்றது. எமது பார்வையில் இது எதிர்கட்சியின் சதியாகவே தெரிகின்றது அகில இலங்கையில் உள்ள அனைத்து பட்டதாரிகளும் இவ்வாறான கண்னோட்டத்தில்தான் இதனைப்பார்க்கின்றோம் அரசியல்வாதிகள் உங்கள் அரசியல் பிரச்சினைகளை உங்கள் உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள். கடிணமாக கற்றுவந்த பட்டதாரிகளை உங்களின் அரசியல் வலையில் சிக்கவைக்காமல் எம் மனநிலையை உணர்ந்து நடக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

மட்டக்களப்பு மாவட்டத்தல் 2625 வேலையில்லா பட்டதாரிகள் உள்ளனர் அவர்களுக்கு நியமனத்திற்காக என அனுப்பபட்டுள்ள கடிதங்களில் 200 கூட கிடைக்கப்பெற்றதா என்பது சந்தேகமானது இதனையும் கவணத்தில் கொள்ளுமாறு கேட்கின்றோம்

எமது இப்பிரச்சினைகள் தொடர்பில் தேர்தல் ஆணையாரள் மகிந்த தேசப்பிரிய மற்றும் ஜனாதிபதி கோத்தபாய ஆகியோர் நியாயமானதுமான நீதியுமான ஒரு முடிவைஎங்களுக்கு கூறும்படி கேட்டுக்கொள்கிறோம்.