இராணுவச் சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுன்னாகம் காவல்துறைப் பிரிவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் (வயது-22) என்ற இளைஞரே இவ்வாறு இராணுவ சிப்பாயால் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினர் தன்னை வழிமறித்துத் தாக்கியதாக இளைஞர் தெரிவித்துள்ளார்.