யாழில் இளைஞர் மீது இராணுவ சிப்பாய் தாக்குதல்

இராணுவச் சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சுன்னாகம்  காவல்துறைப் பிரிவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினருக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் (வயது-22) என்ற இளைஞரே இவ்வாறு இராணுவ சிப்பாயால் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினர் தன்னை வழிமறித்துத் தாக்கியதாக இளைஞர்  தெரிவித்துள்ளார்.