மைத்திரிக்கு கௌரவ பதவி ஒன்றைக் கொடுக்குமாறு சுதந்திரக் கட்சி கோரவில்லை ; தயாசிறி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கௌரவ பதவியை பெற்றுக்கொடுக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்தவொரு கோரிக்கையையும் விடுக்கவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

குறித்த ஊடக சந்திப்பில் தயாசிறி மேலும் தெரிவிக்கையில், மைத்திரிபால சிறிசேனவுக்கு சிறந்த பதவியொன்றை வழங்குமாறு கோரி எந்தவித கடிதத்ததையும் நாம் அனுப்பவில்லை. எனினும் அவருக்கு உரியபதவியொன்றை அரசாங்கம் வழங்குமென நம்புகின்றோம்” என்றார்.