முல்லையில் வாள்வெட்டுக்குழு நேற்றிரவு அட்டகாசம் – காருக்குத் தீ வைப்பு

முல்லைத்தீவு, கள்ளப்பாடு பகுதியில் வீடொன்றினுள் புகுந்த வாள் வெட்டுக்குழு வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வீட்டில் நின்ற காருக்கும் தீ வைத்துள்ளது.

நேற்றிரவு இடம் பெற்ற குறித்த சம்பவத்தில் , கார் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.